Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ், மாேர் வழங்கல்
திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள பழங்கள் ஜூஸ் வழங்கல்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தற்காத்துக் கொள்ளும் வகையில் ஜூஸ் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சியான பழங்கள், மோர், தர்பூசணி, லெமன் ஜூஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். கோடை காலம் முழுவதும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் காவலர்கள் உடனிருந்தனர்.