/* */

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
X

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

இரண்டு நாட்கள் விடுமுறை தினம், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, காரணத்தினாலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சபரிமலைக்கு மற்றும் மேல்மருவத்தூருக்கு செல்லும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலமும் செல்ல தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக மாடவீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 26 Dec 2021 2:25 PM GMT

Related News