/* */

தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் கலெக்டர் ஆய்வு

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆய்வு
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி, தர்கா சந்து ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மரு. அஜிதா, திருவண்ணாமலை நகராட்சி திருமதி. ஆர். சந்திரா, நகர் நல அலுவலர் மரு. மோகன், அரசு அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவிட் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசு மருத்துவமனைகள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் இன்று நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கோவிட்19 சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று நடைபெற்ற முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் 81 நபர்களும் பெண்கள் 36 நபர்களும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் 36 நபர்களும் பெண்கள் 23 நபர்களும் செலுத்தி கொண்டனர்.

தேரடிவீதியில் உள்ள தனியார் துணிக்கடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவதன் அவசியம் குறித்தும், முக கவசம் அனிவதன் அவசியம் குறித்தும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கோபால் தெரு, தர்கா சந்தில் உள்ள மக்கா மஸ்ஜித் & மதரஸா பள்ளிவாசலில் தொழுகைக்கு வருபவர்களிடம் தாங்களும் தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் தடுப்புசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும் தேரடி வீதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, வரும் வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவதன் அவசியம் குறித்தும். முக கவசம் அனிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Updated On: 31 July 2021 2:56 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!