/* */

மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலக திறப்பு விழா :ஆட்சியர் பங்கேற்பு

வாழ்ந்து காட்டுவோம் திட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் திறந்து வைத்து பார்வையிட்டார்.

HIGHLIGHTS

மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலக திறப்பு விழா :ஆட்சியர்  பங்கேற்பு
X

மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை ஆட்சியர் முருகேஷ் திறந்து வைத்த காட்சி.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் திறந்து வைத்தார். தனிநபர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் தொழில் குழு சார்ந்த உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சையது சுலைமான், வாழ்ந்து காட்டும் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள்மற்றும் பொதுமக்கள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 July 2022 2:54 AM GMT

Related News