/* */

அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி புனரமைப்பு

திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஒத்துவார் பயிற்சிப் பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கடந்த மாதம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 27ஆம் தேதி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் அந்த அறிவிப்பில் தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சமய தீட்சை பெற்றவர்கள், சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில், திருவண்ணாமலை அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி பயிற்சிகள் தொடங்க தயாராக புனரமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Oct 2021 11:43 AM GMT

Related News