Begin typing your search above and press return to search.
மகா தீப தரிசனம் நிறைவு
மகா தீப தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து , கார்த்திகை தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கடந்த 19-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும். அதன்படி, கடந்த 19-ந் தேதி முதல் நேற்று வரை மகா தீபம் காட்சியளித்தது. 11-வது நாளான நேற்றுடன் மகா தீபம் தரிசனம் நிறைவு பெற்றது. பக்தர்கள் அனைவரும் கடைசி நாளான நேற்று மகா தீபத்தை கண்டு தரிசித்தனர்.
இந்நிலையில், இன்று மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டது. பின்னர், மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் மகா தீப கொப்பரை வைக்கப்படவுள்ளது.
ஏராளமான பக்தர்கள் அந்த தீப கொப்பரை வணங்கி வருகின்றனர்.