Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகர பகுதியில் பஸ்கள், கனரக வாகனங்களில் விதிமுறைகளுக்கு மாறாக அதிக ஒலி ஒழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சுப்பிரமணியன், சக்திவேல் மற்றும் போலீசார் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். இதில் 55 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.