/* */

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய வகுப்பறை கட்ட பணிகள் துவக்கம்..!

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் புதிய வகுப்பறை கட்ட பணிகள் துவக்கம்..!
X

புதிய வகுப்பறைகள் கட்ட பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் அடுத்த நாவாபாளையம் கிராமத்தில் புதிய ஆறு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாவாபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் புதிய ஆறு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் .மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

பஞ்சாயத்து தலைவர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம் எல் ஏ, சரவணன், புதிய ஆறு வகுப்பறை பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது;

நான் சென்ற 20 தினங்களுக்கு முன்பு புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பள்ளி கட்டிடம் ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க வந்த போது இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதாவது எங்கள் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இல்லை. நாங்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று தான் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும். அதனால் எங்கள் பகுதியில் புதிய மேல்நிலைப்பள்ளி வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களிடமும், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடமும் கூறி எங்கள் கலசப்பாக்கம் தொகுதியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள நாவாபாளையம் பகுதியில் மேல்நிலைப்பள்ளி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து இப்பொழுது புதிய ஆறு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாவா பாளையம் பகுதியில் புதிய நூலகம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளீர்கள் விரைவில் நூலகம் அமைத்துக் கொடுக்கிறேன் என சரவணன் எம்எல்ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் ,ஒன்றிய கவுன்சிலர்கள் ,கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றிய தலைவர்கள் ,அரசு ஒப்பந்தக்காரர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ,அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி ஒரு கண்ணோட்டம்

நாவாபாளையத்தில் புதிய ஆறு வகுப்பறை பள்ளி கட்டிடம்: எம்.எல்.ஏ. சரவணன் பூமி பூஜை

கலசப்பாக்கம் அடுத்த நாவாபாளையம் கிராமத்தில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிய ஆறு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாவாபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

பஞ்சாயத்து தலைவர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன், புதிய ஆறு வகுப்பறை பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:

"நான் 20 நாட்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்தபோது, மக்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் 5 கிலோமீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை இருப்பதாக கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பேரில், ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிய ஆறு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாவாபாளையத்தில் புதிய நூலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய அம்சங்கள்:

  • ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிய ஆறு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம்
  • மேல்நிலைப்பள்ளி கோரிக்கை நிறைவேற்றப்படும்
  • புதிய நூலகம் அமைக்க நடவடிக்கை

பயன்கள்:

  • நாவாபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி
  • மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் தூரம் குறைவு
  • கல்வியறிவு விகிதம் அதிகரிப்பு

Updated On: 12 March 2024 2:41 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!