/* */

நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்

HIGHLIGHTS

நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்
X

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தரைமட்டமான வீடு

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகில் உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவரின் மகன்கள் லியோபெலிக்ஸ், அலெக்சாண்டர் மற்றும் உறவினர் ஜான்போஸ்கோ ஆகியோர் அமிர்தராஜுக்கு சொந்தமான தகர ஷீட் வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டில் திடீரெனப் பயங்கரவெடி சத்தம் கேட்டது.

வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி, வீட்டின் சுவர், மேற்கூரை இடிந்து விழுந்து. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மூவரையும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தச்சம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் வனப்பகுதிகளில் உள்ள மான், முயல், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளை வேட்டையாட அப்பகுதிகளில் வசிப்போர் நாட்டு வெடி குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். படுகாயம் அடைந்த மூவரும் நாட்டு வெடி மருந்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. விபத்து குறித்து வனத்துறையினரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 7:15 AM GMT

Related News