/* */

திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திருத்தணியில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது; ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் கனகம்மா சத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருவள்ளூரில் இருந்து ஆந்திரா நோக்கி வந்த மினி லாரியை, போலீசார் மடக்கி மடக்கி சோதனை செய்தனர். அதில் 800. கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. திருநின்றவூர் சேர்ந்த லாரி ஓட்டுநர் உதயா (35) என்பவரை கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்த ரேசன் அரிசியை, திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 18 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை