/* */

கள்ளக்காதல் விவகாரத்தில் காதலிக்கு கத்திகுத்து- காதலன் தற்கொலை

திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கத்தியால் குத்திய காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்காதல் விவகாரத்தில் காதலிக்கு கத்திகுத்து- காதலன் தற்கொலை
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள மணவூர் பாகசாலை காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஏசு(41). இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், ஏசுவுக்கும் அவரின் வீட்டு எதிரே வசிக்கும் ஜான்சி(30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஜான்சி ஏசுவிடம் பேச மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜான்சி திருவாலங்காட்டில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு தனது மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது எல்.வி.புரம் என்ற இடத்தில் மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது வழி மறித்த ஏசு மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான்சியின் முகம் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஜான்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தப்பியோடிய ஏசு மணவூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 14 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்