/* */

திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மது கடத்திவரப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்தந்த காவல்நிலையங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராமல் நீண்ட ஆண்டுகளாக காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததால், அந்த வாகனங்களை ஏலம் விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் இன்று ஏலம் விடும் பணியானது திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் தொடங்கியது.

அதில் 204 இரு சக்கர வாகனங்கள், 18 மூன்று இருசக்கர வாகனங்கள், 42 நான்கு சக்கர ஏலம் விடும் பணியானது இன்று தொடங்கியது. இன்று நடந்த ஏலத்தில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை கலந்துகொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வைப்புத் தொகை கட்டணமாக 1000 ரூபாய் செலுத்தி, ஏலம் கேட்ட தொகை அரசு விற்பனை வரியாக இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும் மூன்று சக்கர வாகனத்தை 18 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Updated On: 31 Aug 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்