/* */

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர்   பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது
X

கைது செய்யப்பட்ட மகன்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி தமிழ்காலனி பகுதியை சேர்ந்தவர் வேணு (60). கூலி தொழிலாளியான இவரது மனைவி சில வருடங்களுக்கு இறந்த நிலையில் தமது மகன் மணிகண்டனுடன் (20) வசித்து வந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளான நேற்று அனைத்து பகுதி மக்களும் வாக்களித்து வந்த நிலையில் வீட்டிலிருந்த மணிகண்டன் மாலையில் திடீரென ரத்தக்கரையுடன் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆரணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கூலி தொழிலாளி வேணு வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுவது குறித்து தந்தை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை வேணுவை மணிகண்டன் சுவற்றில் இடித்து தாக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்த வேணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஆரணி போலீசார் தந்தையை அடித்து கொன்ற மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றிய மகனை தட்டிக்கேட்ட தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Feb 2022 4:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...