/* */

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர் கலெக்டர்

திருவள்ளூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர் கலெக்டர்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வாக்காளர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வாக்களிப்பதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மேளதாளங்களுடன் வாக்காளர் அழைப்பிதழ்களை வாக்காளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.

திருவள்ளுர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்டம், மயிலாட்டம். தப்பாட்டம், குழுவினர்களோடு மேளதாளங்களுடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை வாக்காளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார்கள்.

முன்னதாக என்.ஜி.ஓ காலணியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் வாக்காளர் அழைப்பிதழ்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து பெரியகுப்பம் TELC நடுநிலைப்பள்ளி மற்றும் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மின்விளக்கு, தளம், கழிப்பறை வசதி. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு அடிப்படை உட்கட்ட அமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும் என உதவி தேர்தல் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார்,கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி,திருவள்ளூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, வட்டாட்சியர் வாசுதேவன். மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2024 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?