/* */

பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிசன் படுக்கை தயார்

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கை வசதி தயார்

HIGHLIGHTS

பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிசன் படுக்கை தயார்
X

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளதாகவும் வருகிற திங்கட்கிழமை முதல் கொரோனா சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்க படுவார்கள் எனவும் சுகாதாரத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது அதிக அளவில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி ஆக்சிஜன் படுக்கை, சாதாரண படுக்கை மற்றும் ஐ.சி.யு படுக்கை வசதி என மொத்தம் 1685 படுக்கைகள் உள்ள நிலையில், அதில் 988 படுகைகள் நிரம்பியுள்ளதாகவும் தற்போது 697 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள 250 மொத்த படுக்கைகளும் நிரம்பியதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து மாவட்ட தலைநகரை ஒட்டிய திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனுக்கு சொந்தமான இந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது 54 படுக்கைகள் ஆக்சிசன் வசதியுடன் அமைக்கும் பணி முடிந்த நிலையில், வருகிற திங்கள்கிழமை முதல் கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 May 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்