/* */

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை
X

திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி(56). இவர் கடந்த மாதம் 23ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனிடையே, மணவாள நகர் பகுதியில் வசிக்கும் லட்சுமியின் மகள் மாலினி, நேரம் இருக்கும் போது வீட்டிற்கே சென்று பார்த்து வருவார். அதன்படி, நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்திருந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று மாலினி பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.7.1/2 லட்சம் மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு, மாலினி தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 2 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!