/* */

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு

கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக  இதுவரை 600 வழக்குகள் பதிவு
X

வாகன சோதனை நடைபெறும் இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, வாகன தணிக்கை செய்து வருகின்றனர். , திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, வாகன தணிக்கை நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

வாகனங்களில் வருபவர்கள் முறையாக இ- பதிவு செய்து உள்ளார்களா அல்லது அவர்கள் உண்மையாக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருகிறார்களா என்பதை சோதனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் உட்கோட்ட டிஎஸ்பி பொறுப்பு அசோகன், டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ். ஐ. சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Updated On: 19 May 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்