Begin typing your search above and press return to search.
பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு அபராதம்!
பூந்தமல்லியில் வெளிப்புறம் மூடிவிட்டு உள்புறமாக வியாபாரம் செய்த இறைச்சி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இறைச்சிக் கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் முன்பக்கம் மூடப்பட்டு உள்பகுதியில் இறைச்சிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றனர்.
அப்போது 2 பேர் கடைக்குள் கோழி இறைச்சியை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 50 கிலோ இறைச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து, அந்த கடைக்கு ரூ.2000 அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.
விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.