/* */

ஊரடங்கை மீறியவர்களின் பைக், செல்போன் பறிமுதல்: போலீசார் அதிரடி!

பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கை மீறியவர்களின் பைக், செல்போன் பறிமுதல்: போலீசார் அதிரடி!
X

ஊரடங்கை மீறி சுற்றியவர்களின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது ஊரடங்கு அமலில் உள்ளது. பொது ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரியும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே தேவையின்றி சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்களின் உரிமையாளர்களிடமிருந்து செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

செல்போன் பறிமுதல் செய்தபோது

மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்ததோடு அவர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் தரப்பில் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள் மட்டுமல்லாது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 14 May 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா