/* */

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் காசிரெட்டிபேட்டை ஆரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்துவதாக பென்னலூர்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காசிரெட்டிபேட்டை கிராமம் ஆரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் கொண்டு வந்த 4 மூட்டை மணலை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு வந்து அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் காசிரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (27) என்பது தெரியவந்தது. எனவே குற்றவாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 July 2021 6:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்