Begin typing your search above and press return to search.
புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதி புழல் ஏரிக்கரையில் தினமும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு, இன்று நடைபயிற்சியில் ஈடுபட்ட மக்கள் ஏரியில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போராடி மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து அவரை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்தவர் யார், தற்கொலையா, கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.