/* */

ஆரணி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பயணச்சீட்டு வைத்துதான் ஆரணிக்கு வந்து பள்ளியில் பயின்று செல்கின்றனர்

HIGHLIGHTS

ஆரணி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
X

 அரசுப் பேருந்து உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள்

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் இங்கு அரசு ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் பெரியபாளையம் கொசவன் பேட்டை காரணி புதுப்பாளையம் பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பயணச்சீட்டு வைத்துதான் ஆரணிக்கு வந்து பள்ளியில் பயின்று செல்கின்றனர்.

இந்நிலையில் மாலை மற்றும் காலை நேரங்களில் வீடுகளுக்குச் செல்ல, சில பேருந்துகளில் மாணவர்களை ஏற்றுவதில்லை என்றும், சில பேருந்துகள் மட்டும் மாணவர்களை அனுமதிப்பதும், அதில் பொதுமக்கள் பலர் பயணம் செய்வதால் மாணவர்கள் பேருந்து உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்டு கொண்டு மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Updated On: 23 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்