/* */

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மேலும் 2மணி நேரம் அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்ட நிலையில், இன்று காலை காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பொன்னேரி சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.

இருசக்கர வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து பொருட்களை வாங்கி செல்வதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் அதிக கூட்டம் சேர்க்கும் கடைகளுக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பகல் 12வரை கடைகளை திறந்து வைக்க அனுமதியளித்திருந்த நிலையில், தற்போது காலை 6மணி முதல் 10மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என நேரம் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் ஒரே நேரத்தில் குவிவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காய்கறி, பூ உள்ளிட்ட விரைவில் அழுகி வீணாகும் பொருட்கள் என்பதால் அவற்றை விற்பனை செய்யும் கடைகளை முன்பிருந்தது போல நேரத்தை பகல் 12மணி வரை நீட்டிக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கிராமப்புறங்களில் இருந்து அதிகளவிலான மக்கள் இருசக்கர வானங்களில் பொன்னேரிக்கு வருவதாலும் கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகவும், சுற்றுப்புற இடங்களில் இருந்து வருபவர்களை போலீசார் கட்டுப்படுத்தினால் கடைகளில் கூட்டம் குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 May 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது