/* */

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தண்ணீரை கழிவுநீர் தொட்டிக்குள் பீய்ச்சி அடித்து பசுவை கயிறு கட்டி 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

பொன்னேரியில்  கழிவுநீர்த்தொட்டிக்குள்  விழுந்த பசுமாடு மீட்டக்கப்பட்டது.

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி 3மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல தமது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது சாலையோரத்தில் அருகில் இருந்த சுரேஷ் என்பவரது வீட்டின் மேல்மூடி சிதிலமடைந்த கழிவுநீர் தொட்டிக்குள் பசு தவறி விழுந்தது தத்தளித்தது. இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பசுவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை கழிவுநீர் தொட்டிக்குள் பீய்ச்சி அடித்து பசுவை கயிறு கட்டி சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் பசு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Updated On: 18 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’