/* */

மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா

மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா
X

மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் மகா அக்னி பிரம்மோற்சவ தீமிதி திருவிழா பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனின் அருள் பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில்அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் மகா அக்னி பிரம்மோற்சவ தீமிதி திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் விழா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நாளாக மகாபாரத இதிகாசத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளான அரக்கு மாளிகை பாஞ்சாலி திருக்கல்யாணம் அர்ஜுனன் தபசு துரியோதனன் படுகளம்உள்ளிட்ட நிகழ்வுகள் தினம் தோறும் விழாவாக நடத்தப்பட்டு பஞ்சபாண்டவர்கள் கிருஷ்ணருடன் வீதி உலா வந்து கிராம மக்களுக்கு அருள் பாலித்தனர் இன்று 10 ஆம் நாள் விழாவாக தீமிதி திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர்.

விழாவின் இறுதி நாளாக தருமர் பட்டாபிஷேக விழா உடன் விழா நிறைவடைகிறது. தீமிதி விழாவில் பெரும்பேடு, உப்பிரபாளையம் பேட்டை, பெரியமனோபுரம், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனின் அருளை பெற்றனர்.

தீமிதி விழாவானது வண்ண மயமான வான வேடிக்கைகளுடன் சிறப்பாக நடைபெற்றது அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 3 July 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்