/* */

சிறுவாபுரி முருகன் கோவிலில் 86 நாட்களில் ரூ.70.73 லட்சம் உண்டியல் காணிக்கை

சிறுவாபுரி முருகன் கோவிலில் 86 நாட்களில் ரூ.70.73 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

சிறுவாபுரி முருகன் கோவிலில் 86 நாட்களில் ரூ.70.73 லட்சம் உண்டியல் காணிக்கை
X

உண்டியல் காணிக்கையை எண்ணும் பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாய் 1. கோடி மதிப்பீட்டில் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து நாள்தோறும் கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கி விட்டார்.

கோவிலில் குழந்தை பாக்கியம், வீடு கட்ட, ரியல் எஸ்டேட், திருமண தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி கோவில் சுற்றி வலம் வந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருவதால் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

இந்நிலையில் 86.நாட்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 70லட்சத்து 73ஆயிரம் ரூபாயும், தங்கம் 76கிராமும், வெள்ளி 8கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Updated On: 27 May 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா