/* */

அத்திப்பட்டு பகுதியில் பசுமாடுகள் திடீரென உயிரிழப்பு

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் பசுமாடுகள் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் கால்நடை துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், கால்நடை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS




திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கு சொந்தமான 20 பசு மாடுகளில், கடந்த 2 நாட்களில் 2 பசு மாடுகள் திடீரென உயிரிழந்தன. இன்று 4 மாடுகள் நிற்கமுடியாமல் கீழே விழுந்ததை கண்ட அவர், இது குறித்து கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் கால்நடைத்துறை அதிகாரிகள் மாடுகளை சோதனையிட்டு அதனை நிறுத்தி வைக்கும் போது மாடுகள் நிற்காமல் கீழே விழுந்தன.



இதனையடுத்து, பசு மாடுகளுக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொற்று நோய் ஏற்படவில்லை என்றும், மாடுகளுக்கு கால்களில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Dec 2020 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்