/* */

ஆந்திராவில் இருந்து சென்னை கடைக்கு வந்த சந்தன கட்டைகள்: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடைக்கு வந்த சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து சென்னை கடைக்கு வந்த சந்தன கட்டைகள்: 3 பேர் கைது
X

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 50கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல். 3பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்களின்றி அட்டைப் பெட்டியில் துண்டு துண்டுகளாக சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 50கிலோ சந்தன கட்டைகளை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சந்தன கட்டைகள் கடத்தி வந்த சர்பாஸ் அலி, அரப்பஸ், நசீர் அஹம்மது ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ஆந்திராவில் உள்ள கோவிலில் இருந்து சென்னையில் உள்ள கோவிலுக்கு அவற்றை கொண்டு செல்வதாக கூறிய நிலையில் போலீசார் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...