Begin typing your search above and press return to search.
ரயிலில் கடத்தவிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார்
ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர் .
அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் போலீசார் சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய மர்ம நபர்கள் குறித்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.