/* */

கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!

தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஒபுலபுரத்தில் இயங்கிவரும் ஷேரன் பிளைவுட் தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கான்ஷாம் மாஹிர் (31). இவர் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரி செய்ய முற்பட்டுள்ளார்.

அப்போது அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவரை தொழிற்சாலை நிர்வாகம் முதலுதவி செய்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்