/* */

கும்மிடிப்பூண்டி: தனியார் அனல்மின் நிலைய வளாகத்தில் திடீர் தீ விபத்து!

கும்மிடிப்பூண்டி தனியார் அனல் மின் நிலைய வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து நாசமாயின.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பில்லா குப்பத்தில் தனியார் அனல்மின் நிலையம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்த அனல்மின் நிலைய வளாகத்தில் 10ஏக்கர் பரப்பளவிலான தைல மரங்கள் வளர்ந்து விரிந்து காணப்படுகிறது. காய்ந்து கீழே உதிர்ந்த அதன் இலைகளில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவியதால் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அனல்மின் நிலைய காவலாளி ராமன் என்பவர் அளித்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து சாம்பலாகின. நல்ல வேளையாக அனல் மின் நிலையத்தில் தீ பரவாமல் தடுக்கப்ட்டது.

Updated On: 6 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’