/* */

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் கும்மிடிப்பூண்டி சாலையில் ஆறு போல் ஓடும் வெள்ளம்

கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ராட்சத மோட்டார்கள் மூலம் அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள்

HIGHLIGHTS

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் கும்மிடிப்பூண்டி சாலையில் ஆறு போல் ஓடும் வெள்ளம்
X

கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை வெளியேற்றும் காட்சி 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கும்மிடிப்பூண்டி பஜாரில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 61 ஊராட்சி மக்களும் தினமும் வந்து போகும் பரபரப்பான பகுதியாக உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையின் காரணமாக கும்மிடிப்பூண்டின் சாலையின் இரு பக்கமும் மழை வெள்ளம் ஆறு போல் தேங்கி காட்சியளிக்கிறது. இந்த மழை வெள்ளத்தோடு கழிவு நீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி பஜாரில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறையால் போடப்பட்ட கால்வாய்களின் மீது ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிக்கும் சூழலில் கால்வாயில் கழிவுகள் தேங்கி தண்ணீர் வெளியேற முடியாததால் கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலையின் இரு புறமும் தண்ணீர் தேங்கி இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து பஜாரில் இரு பகுதியில் கால்வாய்கள் மீது ஆக்கிரமித்து இருந்த கடைகளுக்குள் சென்று கால்வாய்களை வெட்டி, ராட்சத மோட்டார்கள் மூலம் அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கும்மிடிப்பூண்டியில் எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ கால்வாய்கள் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் எம்எல்ஏ. கோவிந்தராஜன் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், பேரூர் செயலாளர் அறிவழகன்,மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், செயல் அலுவலர் யமுனா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவி, அப்துல் கறீம், நசரத் இஸ்மாயில், கருுணாகரன் விமலா அர்ச்சுனன், காளிதாஸ், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், ஊராட்சி மன்ற தலைவர் கீழ் முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், ஏனாதி மேல்பக்கம் பிரபு, பெத்தி குப்பம் ஜீவா செல்வம் ,மாவட்ட நிர்வாகி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதைப் பற்றி பொதுமக்கள் கூறுகையில் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலைகளில் இருபுறமும் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டது, அப்போது இரு பகுதிகளாக மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டது. பணி முடிந்தவுடன் மணல் முட்டைகளை ஆங்காங்கே அப்படியே வைத்துவிட்டு பணிகளை நிறைவு செய்ததால் மணல் மூட்டைகள் மற்றும் நடைபாதையில் கடை வைத்துள்ள வியாபாரிகளின் குப்பைகள் உள்ளே அடைபட்டது .

இதனால் தான் கழிவு நீர் செல்ல முடியாமல் பஜார் வீதிக்கு வருவதற்கு காரணம். உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு நேரடியாக சென்று நடை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நடைபாதையில் செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 2 Jan 2024 4:24 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...