/* */

கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
X

கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடுமேடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பல இடங்கள் நீர்நிலை ஆக்கிரமித்து கட்டிடம் வீடு கட்டப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நீர் நிலையில் உள்ள வீடுகளை வருவாய் துறை சார்பாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதே பகுதியில் தனியார் இரும்பு உருக்கு ஆலை உள்ளது.இந்த இரும்பு உருக்கு ஆலையில் எதிரே நீர்நிலை ஆக்கிரமித்து சாலை போடப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூவை பாபு தலைமை தாங்கினார்.ம.தி.மு.க. நிர்வாகிகள் தனஞ்செழியன், ரவிக்குமார், ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரதாப் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து கண்டன உரையாக மாநில தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் கண்டன உரை ஆற்றினார். இந்த உரையின் போது இரும்பு உருக்காலை நிர்வாகம் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதனை அகற்றக்கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையறிந்த வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக வட்டாட்சியர் ராமன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் பின்பு கூட்டம் கலைந்து சென்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 4:08 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்