/* */

திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம் தொடங்கி வைப்பு

திருவேற்காட்டில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள் என 50 வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம்  தொடங்கி வைப்பு
X

திருவேற்காடு நகராட்சி சார்பில்  காய்கறி விற்பனைக்காக தயார் நிலையில் உள்ள வாகனங்கள்

முழு ஊரடங்கு காரணமாக திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள், பால் என 50 வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். பின்னர் தூய்மை பணியாளர்கள், விடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வார்கள் நகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை செய்தனர்.

அப்போது பேசிய அவர் கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடு தேடி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் கொரோனா நோய் தொற்று காலத்தில் தாய், தந்தை, மனைவி, கணவன் என யாரும் செய்ய முடியாததை முன் களப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள் அனைவரும் இருகரம் கூப்பி வணங்குவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியாக நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  4. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  5. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  6. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  7. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  8. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  9. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  10. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை