/* */

ஒரு கிலோ கஞ்சாவுடன் பிரபல ரவுடி கைது

ஆவடி அருகே கரலப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஒரு கிலோ கஞ்சாவுடன் பிரபல ரவுடி கைது
X

ரவுடியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,100 கிராம் கஞ்சா.

ஆவடி அடுத்த கரலப்பாக்கம் பெரிய தெருவில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமாக ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஒருவர் 1 கிலோ 100 கிராம் எடை உள்ள கஞ்சா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அதனை பதுக்கி வைத்த வீட்டின் உரிமையாளரும் பிரபல ரவுடியுமான சூரிய பிரகாஷ் என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர் சூரிய பிரகாஷை காவல் நிலையம் கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பொட்டலங்களாக மாற்றி இல்லங்களாக மாற்றி விற்பனை செய்ததை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து போலீசார் சூரிய பிரகாஷை கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 21 July 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!