/* */

அயப்பாக்கம்: முன்விரோதத்தில் கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது

சென்னை அயப்பாக்கத்தில், முன்விரோதத்தில் கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அயப்பாக்கம்: முன்விரோதத்தில் கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது
X

கைதானவர்கள். 

ஆவடி அடுத்து அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசிக்கும் தினேஷ் (33) என்பவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான பாலினோ காரை கடந்த 21-ம் தேதி வீட்டு வாசலில் காரை நிறுத்தியிருந்த போது, அன்று மாலை 5 மணியளவில் இரண்டு நபர்கள் வந்து கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கொடுத்த கூறப்படுகிறது.

இவர் அளித்த புகாரின் திருமுல்லைவாயில் ஆய்வாளர் விஜயராகவன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து எதிரிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வந்தாஅர். நேற்று மதியம் 13.00 மணிக்கு, எதிரிகள் சந்தோஷ் (21) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அயப்பாக்கம் மற்றும் கிருஷ்ணகுமார் (21) தேவி நகர் அயப்பாக்கம் ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்