/* */

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை முதல் தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நாளை முதல் 29ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  நாளை முதல் தடுப்பூசி முகாம்
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள், நாளை முதல் 29 ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

தினசரி காலை 10.30 முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 19ம் தேதி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 20ம் தேதி, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22ம் தேதி, காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 23ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் 26ம் தேதி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27ம் தேதி, மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 28ம் தேதி, உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 29ம் தேதியும் நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முகாம் நடக்கிறது.

Updated On: 18 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு