/* */

கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் கவலை

படைப்புழுக்கள் கட்டுக்குள் வந்த நிலையில் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என, மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

HIGHLIGHTS

கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் கவலை
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில், 1,200 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட படைபுழு தாக்கம் காரணமாக, விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்தனர். தமிழக அரசு 'டெலிகேட்' மருந்தை மானிய விலையில் வழங்கி, படைப்புழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக, புழுக்களின் தாக்குதல் பெருமளவில் குறைந்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், கொள்முதல் விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் சிலர் கூறியதாவது:

ஏக்கருக்கு, 25 முதல் 30 குவின்டால் வரை மகசூல் கிடைக்கும். அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்டு, பொங்கல் முடிந்து அறுவடைக்கு வரும். சில மாதங்களுக்கு முன், குவின்டால் 2,200 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, 1,700 ரூபாயாக குறைந்துள்ளது. குவின்டால், 2,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விலை கட்டுப்படியாகும். படைப்புழு பாதிப்பு குறைந்த நிலையில், கட்டுப்படியாகாத விலை கவலை அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Updated On: 3 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு