Begin typing your search above and press return to search.
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் இன்று தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ எடையுள்ள 15 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு வந்தது.
அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.20.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.19.20 க்கும், சராசரியாக ரூ.20 க்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இதேபோல், 3 ஆயிரத்து 393 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ரூ.101 க்கும், குறைந்தபட்சமாக ரூ.80 க்கும், சராசரியாக ரூ.100 க்கும் என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 897 க்கு விற்பனையானது.