Begin typing your search above and press return to search.
தாராபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
தாராபுரம் பகுதியில் மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், கண், காது, மூக்கு, தொண்டை, முட நீக்கியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை, 3ம் தேதி முகாம் நடத்தப்பட உள்ளது. 14ம் தேதி குண்டடம், 18 ம் தேதி, மூலனுார் வட்டார வள மையத்தில் முகாம் நடக்கிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர், பெற்றோருடன் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.