/* */

வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல். ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்
X

5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடில்லி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நியூடில்லி பகுதியிலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் லாரியை நிறுத்தினர். அதிலிருந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் லாரியை சோதனை செய்தனர்

அப்போது லாரியில் ரேஷன் அரிசி ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சுமார் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 5 Aug 2021 5:46 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...