/* */

தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் வாணியம்பாடி பாலாற்று வெள்ளப்பெருக்கில் அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

HIGHLIGHTS

தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
X

அம்பலூர் தரைப்பாலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெறுகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பாலாற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரையில் இருக்கக்கூடிய பொது மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கின்றன.

அதே நேரத்தில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வரக்கூடிய தண்ணீர் பாலாற்றில் ஒன்றாக இணைந்து தற்பொழுது திம்மாம்பேட்டை, அம்பல்லூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக தண்ணீரானது செல்கிறது

மேலும் இந்த மழையின் காரணமாக அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது இதனால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பலூர் தரைப்பாலத்தில் கண்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மேற்பார்வையில் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர்..

Updated On: 19 Nov 2021 10:11 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!