/* */

நெல்லையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: சிறப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை

வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் சிறப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை.

HIGHLIGHTS

நெல்லையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: சிறப்பு கண்காணிப்பு குழு ஆலோசனை
X

திருநெல்வேலி மாவட்டம் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, காவல்துறை சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபின் தினேஷ் மொடக் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா, காவல்துறை சிறப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபின் தினேஷ் மொடக் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின்குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தயார் நிலையில் உள்ளனர். நீர் நிலைகளை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் மழையினால் எற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்கும் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்படும் பழுதுகளை அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து உடனடியாக சரி செய்து போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் சாலைகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க ஏதுவாக 128 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து விதமான உபகரணங்கள் (ஜெ.சி.பி, கிட்டாட்சி, நீர் உறிஞ்சும் மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரங்கள்) போன்ற பல்வேறு விதமாக இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

மழை காலம் முடிந்தவுடன் பழுதான சாலைகளில் உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேலும் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை உடனடியாக தற்காலிகமாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட மழைகால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளிலும் தேவையான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரதுறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், கோட்டாட்சியர்கள் சந்திரசேகர் (திருநெல்வேலி), சுமதி (சேரன்மகதேவி), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாத்துரை, சிற்றாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிசந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அபிபுர்ரகுமான், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 10 Nov 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்