/* */

தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி

தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி
X

234 தொகுதிகளிலும் 10,000 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் முன்பே டேபிள் அமைத்து பணப்பட்டுவாடா செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒரு ஆண்டு பட்ஜெட்டில் பாதிக்குமேல் கோவில் சொத்தின் மூலம் வருமானம் வரும் அளவுக்கு இருக்கிறது ஆனால் ஆண்டுக்கு வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக தவறான தகவலை இந்து அறநிலைத்துறை தெரிவிக்கிறது எனவே தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Updated On: 22 April 2021 4:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  2. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  6. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  7. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  9. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  10. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்