திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.
கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் மாநகராட்சி சார்பில் நாளை 30 ம் தேதி பாளையங்கோட்டை டார்லிங்நகர் மற்றும் தச்சநல்லுார் நல்மேய்ப்பர் நகர் ஆகிய 2 மையங்களில் பொதுமக்களுக்கு நாளை இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி நாளை காலை இரண்டு மையங்களிலும் டோக்கன் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொதுமக்கள் உணவு உட்கொண்டு, தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.