/* */

தீபாவளியையாெட்டி தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

HIGHLIGHTS

தீபாவளியையாெட்டி தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
X

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

1. வண்டி எண் 06037 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி அன்று இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06038 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலிலிருந்து நவம்பர் 5ஆம் தேதி மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

2. வண்டி எண் 06040 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் நவம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக சென்று மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. வண்டி எண் 06049 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நவம்பர் 8 ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, கோவில்பட்டி வழியாக சென்று மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு விழுப்புரம் அரியலூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.

Updated On: 2 Nov 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?