நெல்லை-காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை

100 நாள் வேலை வாய்ப்பு அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி காருகுறிச்சி ஊராட்சி மன்றத்தை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை-காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகை
X

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட காருகுறிச்சி கிராமத்தினர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சேரன்மகாதேவி அடுத்த காருகுறிச்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 800 நபர்கள் அட்டை வைத்துள்ளனர். ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 நபர்களுக்கு மட்டுமே வேலை அளிப்பதாக தெரிகிறது. இதனால், அட்டை உள்ள அனைவருக்கும் சீராக வேலை வழங்கக்கோரி காருகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊர் மக்கள் திடீரென திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார் தலைமையிலான அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் வந்த காரணத்தினால் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள வேலை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், புதிய வேலையை அமைத்து அதில் சீராக சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை அளிப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 19 July 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள்...
  2. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  3. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  4. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  5. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  6. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  7. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  8. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  10. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்