/* */

திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 2 கிராம ஊராட்சி தலைவர்கள், 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 24 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்தலில் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. முடிவுகள்16-ம்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (புதன்கிழமை) இறுதி நாளாகும். இந்த பதவிகளுக்கு நேற்று வரை 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான தொலைபேசி எண் 0431- 24 10 876 ஆகும்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்

Updated On: 22 Sep 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு