/* */

பாரத் பந்த் போராட்டத்திற்கு ஏரி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு

27-ம் தேதிபாரத் பந்த் போராட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

HIGHLIGHTS

பாரத் பந்த் போராட்டத்திற்கு ஏரி ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு
X

திருச்சியில் நடந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் பூரா. விசுவநாதன் பேசினார்.

திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநிால பொதுச்செயலாளர் சண்முகம், மாநில செய்தி தொடர்பானர் வி. அரவிந்தசாமி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய அரசுக்கு எதிரான பாரத் பந்தில் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழக விவசாயிகளின் வற்புறுத்தலின் பேரில் தமிழக முதல்வர் தலையிட்டு கர்நாடக முதல்வருடன் பேசி தற்போது தமிழகத்தில் நடந்து வரும் குறுவை சாகுபடி மற்றும் நடைபெறவுள்ள சம்பா சாகுபடிக்கு தேவையான 30 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக பெற்றுத் தர வேண்டும்.

அதே போல் மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோவதாக இருக்கிறது. மேலும், இலவச மின்சார திட்டத்திற்கு பைசா வசூல் செய்வதாக செய்திகள் வருகிறது. எனவே, மின்சார திருத்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 24 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!