Begin typing your search above and press return to search.
ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது
பராமரிப்பு பணி நடப்பதால், திருச்சி ஓயாமாரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது. மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில், வார்டு எண் 8-க்கு உட்பட்ட பகுதியில் ஓயாமரி எரிவாயு தகனம்கூடம் உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், மராமத்து பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்கள் தகனக்கூடம் இயங்காது.
மாற்று ஏற்பாடாக, வார்டு எண் 57-இல் உள்ள உறையூர் கோணக்கரை தகனக்கூடம் மற்றும் வார்டு எண் 4-ல், ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரில் உள்ள தகனக்கூடத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருச்சி மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.